ஏ.ஆர்.ரகுமானால் பின்னணி பாடகராக அறிமுகப்படுத்தப்பட்டவர் பம்பா பாக்யா. 49 வயதான இவர் இன்று காலை திடீரென உடல்நலக்குறைவால் காலமானார். இது இசை ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஏ.ஆர் ரகுமானால் 2.O படத்தில் பாடகராக அறிமுகப்படுத்தப்பட்டவர் பாக்யராஜ் என்கிற பம்பா பாக்யா. அந்த படத்தில் புள்ளினங்கால் என்கிற பாடலை பாடினார்.
அதைத்தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான விஜய்யின் சர்க்கார் படத்தில் சிம்டாங்காரன் என்கிற பாடலையும், பிகில் படத்தில் காலமே என்கிற பாடலையும் பாடி, அந்த சூப்பர் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பம்பா பாக்யா.

விரைவில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கூட பொன்னி நதி என்கிற பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.