V4UMEDIA
HomeNewsKollywoodபுஷ்பா வசனத்தை புரமோஷனுக்கு பயன்படுத்திய விக்ரம்

புஷ்பா வசனத்தை புரமோஷனுக்கு பயன்படுத்திய விக்ரம்

விக்ரம் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கதாநாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தன் மற்றும் முக்கிய வேடங்களில் மியா ஜார்ஜ், கனிகா ஆகியோர் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ராகுல் மாதவ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் இடைவிடாது கலந்து கொண்டு வருகிறார் விக்ரம். இன்றைய ரசிகர்களின் நாடித்துடிப்புக்கு ஏற்ப தனது பேச்சால் அவர்களை கவர்ந்தும் வருகிறார் விக்ரம்

அப்படி சமீபத்திய புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரம் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா படத்தில் இருந்து சூப்பர் ஹிட் ஆன ஒரு வசனமான புஷ்பான்னா பிளவர்னு நினைச்சியாடா.. ஃபையர்” என்கிற வசனத்தை அந்நியன், அம்பி ஆகிய கதாபாத்திரங்கள் பேசுவது போல பேசி கைதட்டலை அள்ளினார்.

இன்னொரு நடிகரின் வசனத்தை பேசி நம் படத்தை புரோமோட் செய்வதா என எந்த ஈகோவும் இல்லாமல் விக்ரம் பேசியது ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்தது.

Most Popular

Recent Comments