கடந்த 25 வருடங்களுக்கு முன்பு கமலை வைத்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. லஞ்சத்துக்கு எதிராக உருவாகியிருந்த அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்கினார்கள்.

ஷங்கரும் கமலும் லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக அறிவித்தது. சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, அதன்பிறகு கொரோனா தாக்கம் என சில காரணங்களால் அந்தப்படம் திடீரென கிடப்பில் போடப்பட்டது.

அதன் பிறகு திடீரென ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். தற்போது பாதிக்கு மேல் அந்த படத்தின் படப்பிடிக்கும் நடைபெற்று முடிந்துள்ளது. ஷங்கரின் இந்த செயலால் லைக்கா நிறுவனம் அவர்கள் மீது கோபப்பட்டவுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தடுத்தது. அதேசமயம் நீதிமன்ற தீர்ப்பு ஷங்கருக்கு சாதகமாக அமைந்தது.

இந்தநிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 400 கோடிக்கு மேல் வசூலையும் வாரி குவித்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் கமலின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது.

இதனை தொடர்ந்து சூட்டோடு சூட்டாக இந்தியன் படத்தையும் மீண்டும் துவங்கி விடலாம் என முடிவெடுத்த ஷங்கர், கமல், லைக்கா நிறுவனத்துடன் மீண்டும் சமரசமாகி இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கும் என அறிவித்துள்ளனர். இந்த படத்தில் புதிய தயாரிப்பாளர்கள் ஒருவராக ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்துள்ளது. நேற்று இந்தப்படத்திற்கு மீண்டும் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது.

இந்தியன்-2 படத்தை ஷங்கர் இயக்க ஆரம்பித்தால் ராம்சரண் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விடுமா என்கிற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த இரண்டு படங்களிலும் படப்பிடிப்பும் ஒரே சமயத்தில் நடக்கும் என ஷங்கர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் செப்டம்பர் முதல் வாரம் ராம்சரண் படத்தை மீண்டும் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் துவங்கி நடத்த உள்ளதாகவும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்..