V4UMEDIA
HomeNewsKollywoodஇன்னொரு புதிய சாதனையுடன் வெளியாகும் பொன்னியின் செல்வன்

இன்னொரு புதிய சாதனையுடன் வெளியாகும் பொன்னியின் செல்வன்

அமரர் கல்கி எழுதி தமிழ் வாசகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நாவல் பொன்னியின் செல்வன். தமிழகத்தில் மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் வரவேற்பு பெற்ற இந்த நாவலை படமாக்க புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து கமல் தொடங்கி பலரும் இதை படமாக்க முயற்சி எடுத்தனர். ஆனால் ஏனோ சில காரணங்களால் அது கைகூடவில்லை.

இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் தனது கனவு படமாக இதற்கு திரை வடிவம் கொடுத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர், ரசிகர்கள் அனைவரும் தாங்கள் நாவலாக படித்து தங்கள் மனதில் தாங்களாகவே உருவகப்படுத்திக் கொண்ட காட்சிகளை தற்போது திரை வடிவில் பார்ப்பதற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் டெக்னாலஜி இறுதியாக இன்னொரு சாதனையுடன் வெளியாக இருக்கிறது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்றும் இந்த அனுபவத்தை ரசிகர்கள் உணர வேண்டும் என்றும் தகவலை வெளியிட்டுள்ளது.

வரலாற்று படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தை ஐ மேக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட தியேட்டர்களில் பார்ப்பது நிச்சயம் ரசிகர்களுக்கு புது அனுபவமாகத்தான் இருக்கும்

Most Popular

Recent Comments