இனிமேல் காதல் கதைகளில் நடிக்க மாட்டேன், தற்போது நடித்துள்ள சீதாராமம் படம் தான் நான் நடித்த கடைசி காதல் கதையாக இருக்கும் என்று நடிகர் துல்கர் சல்மான் சமீபத்தில் கூறும் அளவிற்கு பல படங்களில் அவர் இதுபோன்று நடித்து விட்டார் என்கிற அலுப்பை தெரிந்துகொள்ள முடிந்தது. அதேசமயம் இந்த சீதாராமன் படத்தின் கதை தன்னை ரொம்பவே கவர்ந்து விட்டதால் மறுக்க முடியாமல் நடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அந்த படம் தான் இப்போது எதிர்பாராத விதமாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று, இப்போது வரை 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தனது சந்தோஷத்தையும் மகிழ்ச்சியும் தற்போது வெளிப்படுத்தியுள்ளார் துல்கர் சல்மான்.

இயக்குனர் ஹனுராகவ புடி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராணுவ பின்னணி கொண்ட ஒரு காதல் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இதன் வித்தியாசமான கதை அம்சம் தான் ரசிகர்களை தியேட்டருக்கு தொடர்ந்து வரவழைத்து வருகிறது என்கிறார்கள்” விநியோகஸ்தர்கள்.