V4UMEDIA
HomeNewsKollywoodகாளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இன்று வரலட்சுமி விரதம் தமிழகமெங்கும் உள்ள பெண்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தங்களது கணவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் ஆயுசுடனும் வாழவேண்டும் என்பதற்காக பெண்கள் செலுத்தும் நேர்த்திக் கடன் தான் இந்த வரலட்சுமி விரதம்.

இந்த நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று அம்பாளை வழிபாட்டு வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

இருந்தாலும் இந்த இருவரும் யாரையும் எங்கேயும் ஒருவரைப் பற்றி ஒருவர் குறை சொல்லவும் இல்லை.. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கவும் இல்லை. இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வரலட்சுமி விரதம் மேற்கொண்டு காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளது சோசியல் மீடியாவில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Most Popular

Recent Comments