V4UMEDIA
HomeNewsKollywoodகவுதம் மேனனுடன் மோதும் பஹத் பாசில் ; ஜூலை 15 இல் விடை தெரியும்

கவுதம் மேனனுடன் மோதும் பஹத் பாசில் ; ஜூலை 15 இல் விடை தெரியும்

மலையாள நடிகர் பஹத் பாசில், ஒருகாலத்தில் தமிழில் சூப்பர் ஹிட் படங்களாக கொடுத்த இயக்குனர் பாசிலின் மகன். தந்தை தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்தாலும், மகன் பஹத் பாசில் தமிழில் நடிப்பதற்கு ரொம்பவே யோசித்து வந்தார். அவரது தயக்கத்தை உடைத்து அவரை வேலைக்காரன் படத்தில் அழைத்து வந்து நடிக்க வைத்தார் இயக்குனர் மோகன் ராஜா.. ஆனால் அது பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆகவில்லை.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்த வரவேற்பைப் பெற்றார் பஹத் பாசில். அதைத்தொடர்ந்து தற்போது கமலின் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில், சொல்லப்போனால் முதல் பாதி முழுவதும் ஹீரோவாக வரும் முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

அந்த வகையில் தற்போது தமிழிலும் பஹத் பாசிலுக்கு வரவேற்பு அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் வரும் ஜூலை 15ஆம் தேதி பஹத் பாசில் நடித்துள்ள நிலை மறந்தவன் என்கிற படம் வெளியாக இருக்கிறது.

மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான டிரான்ஸ் என்கிற படத்தில் மொழிமாற்று படமாக இது வெளியாகிறது. இந்தப் படத்தில் பஹத் பாசிலின் மனைவி நஸ்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் விக்ரம் படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்த செம்பான் வினோத்தும் நடித்துள்ளனர். மதமாற்றும் கும்பலின் முகத்திரையை கிழிக்கும் விதமாக இந்தப் படம் உருவாகி உள்ளது.

Most Popular

Recent Comments