V4UMEDIA
HomeNewsKollywoodசெப்-30 இல் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ; மீண்டும் உறுதி செய்த லைகா

செப்-30 இல் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ; மீண்டும் உறுதி செய்த லைகா

தமிழ் சினிமாவில் வரலாற்று படங்கள் வருவதே இல்லை என்கிற குறையை போக்கும் விதமாக வரும் செப்டம்பர் 30ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாக இருக்கிறது.

அமரர் கல்கி எழுதி ரசிகர்களிடம் மிகப்பெரிய புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை பலர் ஒவ்வொரு காலகட்டத்தில் படமாக்க முடிவு செய்து முடியாமல் போக, தற்போது இயக்குனர் மணிரத்னம் அதை சாதித்து காட்டியுள்ளார்.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது, ஏற்கனவே செப்டம்பர் 30ஆம் தேதி இந்த படத்தை வெளியிடுவது என அறிவித்திருந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது அதை உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்குமுன் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்து வெளியான பாகுபலி படத்தின் 2 பாகங்கள், மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த பழசிராஜா ஆகிய படங்களுக்கு சற்றும் குறையாமல் அவற்றைவிட ஒரு படி மேலாகவே இந்த படம் உருவாகி இருக்கும் என நம்பலாம்.

Most Popular

Recent Comments