V4UMEDIA
HomeNewsKollywoodபட்டுக்கோட்டையாரும் வைரமுத்துவும் கலந்த கலவை நான் ; பாடலாசிரியர் தரன் பெருமிதம்

பட்டுக்கோட்டையாரும் வைரமுத்துவும் கலந்த கலவை நான் ; பாடலாசிரியர் தரன் பெருமிதம்

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான O2 திரைப்படத்தில் காத்தோடு காத்தாக தான் மிதப்போம் என்கிற பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இந்த பாடலை எழுதியவர் வளர்ந்து வரும் இளம் பாடலாசிரியர் தரன். சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த மிஸ்டர் லோக்கல் படத்தில் இடம்பெற்ற பக்கா மிடில் கிளாஸ் ஸ்டார் என்கிற பாடலை எழுதியது இவர்தான்.

இந்த நிலையில் தற்போது O2 படத்தைத் தொடர்ந்து யங் மங் சங், ரஜினி, சண்டக்காரி, சூப்பர் ஸ்டார், ஒன் டூ ஒன், எம்.ராஜேஷ் இயக்கத்தில் வரவிருக்கும் படம் என கைவசம் கணிசமான வாய்ப்புகளை வைத்திருக்கிறார் தரன். பாடலோடு மட்டுமல்லாமல் தற்பொழுது சன்னி லியோன், பிரியா மணி நடிக்கும் Quotation gang திரைப்படத்தில் வசனமும் எழுதிவருகிறார்

மேலும் இவர் ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு, திரிஷாவின் பரமபத விளையாட்டு, எஸ் எஸ் குரமன் இசையில் பட்டதாரி உள்ளிட்ட சில படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். நூற்றுக்கணக்கான தனியிசை ஆல்பங்களும் எழுதியிருக்கிறார்.

இலக்கிய தரத்தோடு சினிமா பாடல்கள் வர வேண்டும். அதே நேரத்தில் எளிதான வரிகளை உள்ளடக்கியும் இருக்க வேண்டும் என்கிற முனைப்போடு பாடல்களை எழுதி வரும் தரன், பாடலாசிரியர்களில் வைரமுத்துவையும் பட்டுக்கோட்டையையும் அதிகம் நேசிப்பதாகவும் தன் பாடல்களிலும் அப்படி ஒரு தரம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்..

Most Popular

Recent Comments