தமிழ் சினிமாவில் அடுக்குமொழி வசனத்துக்கும் கணீர் குரலுக்கும் சொந்தக்காரர் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்மொழி அவதாரத்திற்கு சொந்தக்காரரான டி.ராஜேந்தர். சினிமாவில் அவரது மகன் சிம்பு பிசியாக நடிக்க துவங்கிய பின் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பு, டைரக்ஷனில் இருந்து தன்னை ஒதுக்கி கொண்டார் டி.ராஜேந்தர்.

ஆனாலும் சினிமா சார்ந்த சங்கங்களில் குறிப்பாக விநியோகஸ்தர் சங்கத்தில் தலைவராக பொறுப்பு வகித்து கொண்டு திரைப்படங்களில் உள்ள ரிலீஸ் சிக்கல்களை தீர்ப்பதில் உதவி செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர் தற்போது வெளிநாடு சென்று சிகிச்சை எடுக்க அங்குள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் தற்போது வெளிநாட்டு கிளம்பி சென்றுள்ளார்.

அவர் வெளிநாடு கிளம்பி செல்வதற்கு முன்னதாக நடிகர் கமல் இன்று அவரை நேரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தார் இந்த சந்திப்பின்போது சிம்புவின் சகோதரர் குறளரசன் உடன் இருந்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் நலமுடன் திரும்பி வாருங்கள் சகோதரரே என்றும் குறிப்பிட்டுள்ளார் கமல்.