V4UMEDIA
HomeNewsKollywoodமீண்டும் உள்ளத்தை அள்ளித்தருமா காபி வித் காதல் ?

மீண்டும் உள்ளத்தை அள்ளித்தருமா காபி வித் காதல் ?

தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமான கமர்சியல் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் சுந்தர் சி. நகைச்சுவை படங்கள் ரொம்பவே குறைவாக வந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த பஞ்சத்தை அவ்வப்போது இவரது படங்கள்தான் நோக்கி வருகின்றன. அதேபோல ஹாரர் படங்களிலும் காமெடியை புகுத்தி ரசிகர்களை ஒரே நேரத்தில் பயப்படவும் சிரிக்கவும் வைக்கும் வித்தை தெரிந்தவர் சுந்தர் சி மட்டும்தான்.

இந்த நிலையில் அரண்மனை 3 படத்தைத் தொடர்ந்து அவர் தற்போது இயக்கி வரும் படம் தான் காபி வித் காதல். ஜீவா ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று ஹீரோக்கள் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஊட்டியில் தான் நடைபெற்றுள்ளது. சுந்தர்சியின் சூப்பர் ஹிட் படமான உள்ளத்தை அள்ளித்தா திரைப்படமும் சென்னையில் துவங்கி பெரும்பாலான படப்பிடிப்பு ஊட்டியில் தான் நடைபெற்றது. அந்த படம் மிகப் பெரிய ஹிட்டானது. அதே சென்டிமென்ட் தற்போது காபி வித் காதல் படத்திற்கும் ஒர்க் அவுட் ஆகும் என எதிர்பார்க்கலாம்.

மூன்று மகன்களை பெற்ற தந்தைக்கும் வெவ்வேறு தொழிலில் பணிபுரியும் மகன்களுக்கும் இடையேயான பாசம், அன்பு, கோபதாபம் இவற்றை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது.  மேலும் இந்த படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்கிற அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

Most Popular

Recent Comments