V4UMEDIA
HomeNewsKollywoodஎன் படம் தியேட்டர்களில் மட்டும் தான் வெளியாகும் ; ஒடிடியை ஒதுக்கிய நடிகர் ஆர்கே

என் படம் தியேட்டர்களில் மட்டும் தான் வெளியாகும் ; ஒடிடியை ஒதுக்கிய நடிகர் ஆர்கே

எல்லாம் அவன் செயல் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்கே.. வெற்றிகரமான பிசினஸ்மேன் ஆக வலம் வரும் இவர் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக போலீஸ் அதிகாரியாக இவர் நடித்த என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றன.

இந்தநிலையில் கொரோனா காரணமாக தனது அடுத்த படத்தை துவங்குவதை நிறுத்தி வைத்திருந்த ஆர்கே தற்போது நிலைமை சரியாகி விட்டதால் புதிய பட வேலைகளை துவங்க இருப்பதாக கூறியுள்ளார். விரைவில் அதுபற்றி அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்ஆர்ஆர், கேஜி எஃப் 2 படங்களை போல படத்தயாரிப்பிலும் பிரம்மாண்டம் காட்டுவேன் என்றும் அதில் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டேன் என்றும் கூறியுள்ள ஆர்கே என்னுடைய படங்கள் தியேட்டர்களில் மட்டும்தான் வெளியாகும், அதற்காகத்தான் நான் படம் எடுக்கிறேன் என்று உறுதியாக கூறியுள்ளார். இதன் மூலம் தனது படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாவதில் அவருக்கு விருப்பமில்லை என்பதை தெளிவாகவே தெரிவித்துவிட்டார்.

இன்னொரு பக்கம் வெற்றிகரமான பிசினஸ்மேனாக வலம் வரும் ஆர்கே விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி கடந்த ஐந்து வருடங்களாக மார்க்கெட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.

இந்த ஷாம்பூவின் தரத்தை வெளி உலகத்திற்கு பறைசாற்றும் விதமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் கின்னஸ் சாதனை ஒன்றையும் நிகழ்த்தி காட்டினார் ஆர்கே.

இதை தொடர்ந்து இந்திய அரசு இவரது தயாரிப்பிற்கான 20 வருட காப்புரிமையை வழங்கியுள்ளது. இது ஒரு பக்கமிருக்க இவரது இந்த கண்டுபிடிப்புக்காக 11 நாடுகளில் இருந்து 18 கவுரவ டாக்டர் பட்டங்களும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.  

Most Popular

Recent Comments