நடிகர்கள் விஜய் தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது நேரடி தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஜதிரத்னாலு இயக்குனர் அனுதீப் என்பவர் இயக்கி வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரிஷபோப்ஸ்கா என்பவர் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. சமீப நாட்களாக பாண்டிச்சேரியில் இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது முடிந்ததும் கிட்டத்தட்ட மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போலத்தான் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.

அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான டாக்டர், இந்த மே மாதம் வெளியான டான், என பத்து மாதங்களுக்குள் சிவகார்த்திகேயனின் 3 படங்கள் வெளியாவது அவரது திரையுலக பயணத்தில் ஒரு புதிய சாதனைதான்..