கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தனது காந்தக்குரலால் இசை ரசிகர்களை கட்டிப்போட்டவர் பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம். கிட்டதட்ட 50 ஆயிரம் பாடல்களைப் பாடி, ஆறு முறை தேசிய விருது பெற்றுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 2020ல் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில் பாதிப்புக்கு ஆளாகி ரசிகர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு இவ்வுலகை விட்டு சென்றார்.

சினிமாவில் அவர் ரஜினிக்கு பாடினால் ரஜினியே போடுவது போன்றும் கமலுக்கு பாடல் கமலே பாடுவது போன்றும் அந்த அளவுக்கு தத்ரூபமாக தனது குரலை மாற்றிப் பாடுவது வல்லவராக இருந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய பேரிழப்பு தான்.

இந்த நிலையில் வரும் ஜூன் 4ஆம் தேதி அவரது 75 வது பிறந்தநாள் வர இருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக அவரது மகன் எஸ்பிபி சரண், எஸ்பிபி லைவ்சன் என்கிற இசைக்கச்சேரியை நடத்த இருக்கிறார்.

இந்த நிகழ்வில் இசை உலக பிரபலங்கள் அனைவருமே கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது
