தங்க மீன்கள், பேரன்பு உள்ளிட்ட பல உணர்வுபூர்வமான படங்களை கொடுத்த இயக்குநர் ராம் தற்போது மலையாள முன்னணி நடிகர் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படம் இது..

இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் சூரி இணைந்துள்ளார். சில வருடங்களுக்கு முன் வெளியான. ரிச்சி படத்தை தொடர்ந்து நிவின்பாலி தமிழில் நேரடியாக நடிக்கும் இரண்டாவது படம் இது..

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்திற்காக தற்போது சென்னையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் பிலிம் சிட்டியில் மிகப்பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த காட்சிகள் தொடர்பான புகைபடங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றன.

குறிப்பாக நிவின்பாலி மற்றும் சூரியின் காம்பினேஷன் நிச்சயமாக புதுசாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.