Home News Kollywood எதிரணியினர் செய்த காரியத்தால் 30 சதவீத சுமை அதிகமாகி உள்ளது ; பாண்டவர் அணியினர் வருத்தம்

எதிரணியினர் செய்த காரியத்தால் 30 சதவீத சுமை அதிகமாகி உள்ளது ; பாண்டவர் அணியினர் வருத்தம்

சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாண்டவர் அணியினர் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நேற்று தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

இந்த தேர்தல் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே நடைபெற்றது. ஆனால் தேர்தலில் குளறுபடிகள் நடந்தது என குற்றம் சாட்டிய பாக்கியராஜ் தலைமையிலான எதிரணியினர் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்தனர். தேர்தல் செல்லாது என நீதிமன்றம் வரை சென்றனர். ஆனால் மூன்று வருடம் கழித்து நீதிமன்ற தீர்ப்புப்படி பாண்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்

தற்போது பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பின்பு பாண்டவர் அணியினர் பேசும்போது, கடந்த முறை நடிகர் சங்க பொறுப்பில் இருந்த தாங்கள் செய்த காரியங்களுக்காக போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்றுதான் நினைத்தோம். ஆனால் இந்த அளவுக்கு நிலைமை வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

நடிகர் சங்க கட்டட பணிகளை மீண்டும் துவக்க வேண்டி இருக்கிறது. கடந்த மூன்று வருடங்களில் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக கட்டுமான செலவில் 30 சதவீதம் அளவிற்கு சுமை கூறியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிக்க இன்னும் இருபது கோடி ரூபாய் தேவைப்படுகிறது அதற்காக நிதி திரட்டும் விதமாக நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட அனைவரையும் நேரில் சந்திப்போம் என்று கூறியுள்ளனர்.