இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறாக உருவாகியுள்ள ‘ராக்கெட்ரி ; தி நம்பி எபெக்ட்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் மாதவன்.. மேலும் இந்தப்படத்தை அவரே இயக்கியும் உள்ளார். ராக்கெட் தொழில்நுட்பத்தை அந்நிய நாடுகளுக்குக் கொடுத்ததாக தொண்ணூறுகளில் குற்றம் சாட்டப்பட்டு, தனது வேலையை இழந்ததுடன் சிறைவாசத்தையும் சந்தித்தவர் தான் நம்பி நாராயணன். பின்னர் அந்த வழக்கில் நிரபாரதி என நிரூபிக்கப்பட்டார். அவரது கதாபாத்திரத்தில் தான் மாதவன் நடித்துள்ளார்
இந்த படம் வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது இதையடுத்து அவ்வப்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு படத்தை புரமோட் செய்து வருகிறார் மாதவன்.

இந்நிலையில் இன்று சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் மாதவனுடன் இந்த கதையின் ஒரிஜினல் நாயகனான நம்பி நாராயணனும் கலந்துகொண்டார். அந்த விழாவில் இந்தப் படம் குறித்த காட்சிகள் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. இதைதொடர்ந்து நடிகர் மாதவன் மற்றும் விழாக்குழுவினர் விஞ்ஞானி நம்பி நாராயணனை மேடைக்கு அழைத்து கவுரவித்தனர்.