V4UMEDIA
HomeNewsKollywoodசொந்த ஊரில் ரசிகர்களை சந்தித்த அருண்விஜய்

சொந்த ஊரில் ரசிகர்களை சந்தித்த அருண்விஜய்

நடிகர் அருண்விஜய் இயக்குனர் ஹரி டைரக்ஷனில் தற்போது யானை படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கு முன்னதாக ஏற்கனவே சினம், அக்னிச் சிறகுகள், பார்டர் என இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் படப்பிடிப்புக்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு மகா சிவராத்திரி அன்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

அப்படியே அங்கிருந்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான நாட்டுச்சாலைக்கு சென்ற அருண்விஜய், அங்கே தன்னை சந்திக்க வந்த ரசிகர்களிடம் நீண்ட நேரம் பேசி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளன.

Most Popular

Recent Comments