V4UMEDIA
HomeNewsKollywoodநாய் சேகர் ரிட்டன்ஸ் ; பாடகர் வடிவேலுவும் ரிட்டன்ஸ்

நாய் சேகர் ரிட்டன்ஸ் ; பாடகர் வடிவேலுவும் ரிட்டன்ஸ்

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு, கடந்த பத்து வருடங்களில் திரையுலகை விட்டு சற்று ஒதுங்கியே இருந்ததன் மூலம் தனது ரசிகர்களை பட்டினி போட்டு விட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த நிலையில் மீண்டும் முழுவீச்சுடன் நடிப்பில் களமிறங்கியிருக்கும் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இதுதவிர மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்திலும் முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.

இது ஒரு பக்கமிருக்க நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார் வடிவேலு. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்..

பல வருடங்களுக்கு முன்பே எட்டணா இருந்தால் எட்டூரு எம்பாட்ட கேட்கும் என்பது போன்று சில பாடல்களை பாடியவர் தான் வடிவேலு. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வடிவேலு பாடகர் அவதாரம் எடுத்துள்ளார்.. என்றாலும் இதற்கு முன்பு அவர் பாடிய பாடல்கள் போல அல்லாமல் ஒரு புது மாதிரியான முயற்சியில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Most Popular

Recent Comments