V4UMEDIA
HomeNewsKollywoodரசிகர்களின் பிரார்த்தனைக்கு நன்றி – மருத்துவமனையில் இருந்து பிரகாஷ்ராஜ்!

ரசிகர்களின் பிரார்த்தனைக்கு நன்றி – மருத்துவமனையில் இருந்து பிரகாஷ்ராஜ்!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு ஹைதராபாத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இதன் பின்னர் அவர் மருத்துவமனையில் மேற்கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார். தனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்றும், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிர்களுக்கு நன்றி என்றும், விரைவில் முன்பு போல் வந்து நிற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் நேற்று முன் தினம் தனது வீட்டில் சறுக்கி விழுந்த போது ஏற்பட்ட விபத்தில் காயம் அதிகம் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு பிரகாஷ்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள், தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது என்று கூறினர். இதனையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் பிரகாஷ் ராஜ் தனது நண்பரும் டாக்டருமான ஹைதராபாத்தில் உள்ள குருவாரெட்டியவுடன் ஆலோசனை செய்ததில், அவர் அறுவை சிகிச்சை செய்வதாக சொல்லி நம்பிக்கை கொடுத்திருக்கிறார். இதை அடுத்து ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் சென்றார் பிரகாஷ்ராஜ்.

அதுகுறித்து பிரகாஷ்ராஜ், ‘’ஒரு சிறிய வீழ்ச்சி .. ஒரு சிறிய எலும்பு முறிவு .. ஒரு அறுவை சிகிச்சைக்காக ஹைதராபாத் செல்கிறேன். எனது நண்பர் டாக்டர் குருவாரெட்டியின் பாதுகாப்பான கைகளில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள செல்கிறேன்’’ என்று தெரிவித்திருந்தவர், ’’ நான் நன்றாக இருப்பேன். கவலைப்பட ஒன்றுமில்லை’’ என்று ரசிகர்களுக்கு ஆறுதல் சொல்லி இருந்தார்.

தற்போது அறுவை சிகிச்சைக்கு பின்னர், நலமுடன் இருப்பதாக தெரிவித்து, அறுவை சிகிச்சைக்கு பின்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினையும் வெளியிட்டிருக்கிறார்.

Most Popular

Recent Comments