தமிழ் சினிமாவில் செல்வராகவன்- தனுஷ் கூட்டணி, தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறது. இந்த கூட்டணியில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. காதல் கொண்டேன் படத்தின் மூலம் தொடங்கிய இந்த பயணம், புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் இணைந்து வெற்றி பெற்றது.
தற்போது இந்த கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளது. ‘நானே வருவேன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை அரவிந்த் கிருஷ்ணா கவனிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அது குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளார். தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்து கார்த்திக் நரேன் இயக்கும் D43 படத்தில் நடிக்கவுள்ளார். அதன்பிறகு தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா படத்தில் தனுஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ‘நானே வருவேன்’ இணைவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது