பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா பிரச்னையால் படப்பிடிப்பு நின்று போய் உள்ளது.
அதனால் அடுத்த மாதம் மீண்டும் சலார் படப்பிடிப்பை தொடங்கி ஒரே மாதத்தில் மொத்த படத்தையும் முடித்துக்கொடுக்க முடிவெடுத்துள்ளாராம் பிரபாஸ். அதையடுத்து ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் ஆதிபுருஷ் படத்தில் நடிக்கப் போகிறாராம் .