கொரோனா காலத்தில் நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழும் பூஜா ஹெக்டேவும் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.

இதற்காக ஒரு மாதத்திற்கு தேவையான ரேசன் பொருட்களை கஷ்டப்படும் 100 குடும்பத்தினருக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்கள் சமூவலைதளத்தில் வெளியாகி உள்ளது.