கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவ வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள், நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.
கொரோனா சிகிச்சைக்காக மட்டுமே அத்தொகை பயன்படுத்தப்படும் என அறிவித்த முதல்வர் வசூலான தொகை எப்படி பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
தமிழ்த் திரையுலகம் சார்பாக நடிகர் சிவக்குமார் குடும்பம், ரஜினிகாந்த், அஜித், விக்ரம், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, இயக்குனர்கள் வெற்றிமாறன், ஷங்கர், ஏஆர் முருகதாஸ் உள்ளிட்டவர்களும் நிதியுதவி வழங்கினர்.
தற்போது நடிகைகள் நிதி அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் தலா 1 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்கள். நிதி அகர்வால் இந்த வருடம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.