“வலிமை அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து எங்களைக் கேட்டு வருகிறார்கள் . . ரசிகர்களைக் காத்திருக்க வைப்பது எங்கள் நோக்கமல்ல. இப்போது பெரும்பாலான வேலைகள் முடிந்துள்ளதால் ஏப்ரல் 1ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுகிறோம். டப்பிங் உட்பட மற்ற இறுதிக்கட்ட வேலைகள் தொடங்கிவிட்டது .

நான் இந்த படத்தின் கதையைக் கேட்டவரை, படப்பிடிப்புக்குச் சென்றும், படம்பிடித்த காட்சிகளையும் பார்த்தவரை, கண்டிப்பாக ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியடைவார்கள் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். ஒரு அழுத்தமான குடும்பக் கதையும், அழுத்தமான ஆக்ஷனும் இந்தப் படத்தில் இருக்கிறது. அத்தனை அஜித் ரசிகர்களையும் இந்தப் படம் திருப்திப்படுத்தும். ஏன் அனைத்து சினிமா ரசிகர்களையும் திருப்திப்படுத்தும்.
பைக் துரத்தல் காட்சிகளில், சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் அஜித்தே நடித்துள்ளார். ஆனால் ‘நேர்கொண்ட பார்வை’யைப் போல இந்தப் படத்தை வட இந்தியாவிலும் வெளியிடுவோம். டப்பிங் செய்வோமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை “.