Home News Kollywood பொள்ளாச்சி கடையில் கணவருடன் உணவு சாப்பிட்ட காஜல் அகர்வால்!

பொள்ளாச்சி கடையில் கணவருடன் உணவு சாப்பிட்ட காஜல் அகர்வால்!

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்தார்.

சமீபத்தில் காஜல் அகர்வால் தனது கணவருடன் பொள்ளாச்சியில் மெஸ் ஒன்றில் சாப்பிட்டது குறித்த தனது அனுபவத்தை தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் சாந்தி மெஸ் என்ற பெயரைக் கொண்ட மெஸ்ஸில் சாந்தி அக்கா மற்றும் பாலகுமார் அண்ணா ஆகிய இருவரும் உணவோடு சேர்ந்து அன்பையும் எங்களுக்கு தந்தார்கள். அவர்களுடைய உணவு மிகவும் அருமையாகவும் சுவையாகவும் இருந்தது. கடந்த 27 ஆண்டுகளாக அவர்கள் இந்த ஹோட்டலை நடத்தி வருகின்றனர்.நான் அந்த ஓட்டலின் ஒன்பது வருட ரெகுலர் கஸ்டமர் என்று கூறியுள்ளார்.