V4UMEDIA
HomeNewsKollywood’ஈஸ்வரன்’ ரிலீஸான மறுநாளே சுசீந்திரன் வீட்டில் நிகழ்ந்த சோகம்!

’ஈஸ்வரன்’ ரிலீஸான மறுநாளே சுசீந்திரன் வீட்டில் நிகழ்ந்த சோகம்!

’ஈஸ்வரன்’ ரிலீஸான மறுநாளே சுசீந்திரன் வீட்டில் நிகழ்ந்த சோகம்!

பிரபல இயக்குனர் சுசீந்திரனின் தாயார் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார்.இயக்குனர் சுசீந்திரன் வெண்ணிலா கபடி குழு , நான் மகான் அல்ல ,அழகர் சாமியின் குதிரை ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு உட்பட பல படங்களை இயக்கினார்.

இப்போது, சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு நேற்று ரிலீஸ் ஆனது.

ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சுசீந்திரன், பொங்கலுக்காக ஊரில் இருக்கிறார். இந்நிலையில் அவருடைய தாயார் ஜெயலட்சுமிக்கு இன்று காலை உடல் நிலை சரியில்லாமல் போனது.இதையடுத்து மாரடைப்பு காரணமாக ஒட்டன் சத்திரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி 11 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது. மறைந்த ஜெயலட்சுமியின் கணவர் நல்லுச்சாமி. இவர்களுக்கு இயக்குனர் சுசீந்திரன், தயாரிப்பாளர் நல்லுசாமி பிக்சர்ஸ் சரவணன், மேலும் ஒரு சகோதரர், சகோதரி உள்ளனர். இயக்குனர் சுசீந்திரனின் தாயார் மறைவை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Most Popular

Recent Comments