நடிகர் தனுஷ் 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் நீண்டகாலமாக அந்த படம் தொடங்கப்படாமல் அப்படியே உள்ளது. அதற்கு மிக முக்கியமானக் காரணம் தனுஷ் வரிசையாக அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருவது தான். மேலும் இப்போது செல்வராகவனும் “சாணிக்காயிதம்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இதனால் இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(டிசம்பர் 09) இன்று தனுஷ் தனது கரணன் திரைப்படத்தின் மொத்த படபிடிப்பையும் முடித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘D யுடன் என்றாலே எப்போதும் தனிச்சிறப்பு தான். (when its with D. its always special). என கூறி அதில் தனுஷை டேக் செய்துள்ளார். இதனால் சீக்கிரமே அவர்கள் இருவரும் இணையும் படத்தின் அப்டேட் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.