Home News Kollywood பிஸ்கோத் இயக்குனருடன் மீண்டும் இணையும் சந்தானம் !

பிஸ்கோத் இயக்குனருடன் மீண்டும் இணையும் சந்தானம் !

‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் சந்தானம். அதன் பின் பல படங்களில் காமெடியனாக நடித்து தமிழ் சினிமாவின் நம்பர்.1 காமெடியனாக வலம் வந்தார். பின் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ஹிட் அடித்தன.

இந்த நிலையில் நடிகர் சந்தானம் முதன் முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘பிஸ்கோத்’. பிஸ்கட் கம்பெனி வைத்திருக்கும் ஒருவர் வாழ்க்கையில் எப்படி கடினமாக உழைத்து முன்னேறுகிறார் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

சந்தானம் ஜோடியாக அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பல்லா என இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ், லொள்ளு சபா மனோகர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படம் தீபாவளி அன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியானது. இப்படத்தில் வரும் சந்தானம் மற்றும் சௌகார் ஜானகி வரும் காட்சிகள் ரசிகர்கள் அனைவராலும் ரசித்து பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிஸ்கோத் படம் ஓடும் திரையரங்குகளுக்கு நடிகர் சந்தானம் மற்றும் இயக்குனர் கண்ணனும் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

தியேட்டர் வாசலில் பேசிய இயக்குனர் கண்ணன் ‘சந்தானம் இல்லாமல் இந்த படத்தை உருவாக்கி இருக்க முடியாது. தியேட்டர் ரிலீஸ் என்று கடைசி நேரத்தில் முடிவானதும் பொருளாதார பிரச்சனைகள் எழுந்தன. அதை சந்தானம் தான் முன் நின்று சரி செய்தார். என் அடுத்தபடமும் சந்தானத்தை வைத்துதான் இயக்க உள்ளேன்’ என கூறியுள்ளார்.

இயக்குனர் கண்ணன் தற்போது அதர்வா முரளி மற்றும் அனுபமா வை முன்னணி நடிகர்களாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.