V4UMEDIA
HomeNewsKollywoodSAC தொடங்கிய கட்சியிலிருந்து விலகிவிட்டேன் - தளபதி விஜய்யின் அம்மா எடுத்த முடிவு !

SAC தொடங்கிய கட்சியிலிருந்து விலகிவிட்டேன் – தளபதி விஜய்யின் அம்மா எடுத்த முடிவு !

தளபதி விஜய் பெயரில் அவரது அப்பா கட்சியைப் பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் இக்கட்சியிலிருந்து தான் விலகிவிட்டதாக விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் அவர்கள் மறுப்புத் தெரிவித்து என் பெயரைப் பயன்படுத்தி கட்சி நடவடிக்கைகள் இருந்தால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இந்நிலையில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய்யின் தந்தை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :


எனக்குத் தேவைப்பட்டதால் நான் கட்சி தொடங்கியிருக்கிறேன்…நானும் விஜய்யும் கருத்துவேறுபாட்டுடன் இல்லை; 1993ம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் ஒரு அமைப்பாக தொடங்கப்பட்டது. விஜய் ரசிகர்களின் நலனுக்காகவும் அவர்களை உற்சாகத்துக்காவும் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

விஜய் மக்கள் இயக்கம் தொடங்கியுள்ளது எல்லாம் நன்மைக்காகவே என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் இதுகுறித்து மேலும் கேள்விகள் எழுப்பியதற்கு தனியாக வாங்க, பதில் சொல்லுகிறேன் என சொன்னதையே சொல்லிக்கிட்டு இருந்தார். 

இந்நிலையில் தளபதி விஜய்யின் தந்தை தொடங்கிய கட்சியில் பொருளாளராக நான் இல்லை அதிலிருந்து தான் விலகி விட்டதாக விஜய்யின் தாயும் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியுமான ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என் கையெழுத்தை மட்டும் காரணம் சொல்லாமல் வாங்கிவிட்டு இப்படி செய்து விட்டார் என வருந்தியுள்ளார்.

Most Popular

Recent Comments