காயத்ரி சுரேஷ் தயாரிப்பில் “கொட்டேஷன் கேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு தளர்வு அடைந்தவுடன் கடந்த திங்கள் அன்று தொடங்கப்பட்டது.
இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிரியாமணி நடிக்கிறார். மேலும் தன்யா ரஃபியா பானு, விஷ்ணு வாரியர் மற்றும் அக்ஷயா என பலர் நடிக்கின்றனர்.
ஐந்து மொழிகளில் வெளிவர இருக்கும் இப்படத்தில் பிரியாமணி “ஒப்பந்த கொலையாளி”யாக தோன்றுகிறார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் இத்திரைப்படம் மும்பை, தமிழ்நாடு, ஆந்திரா பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. அபாயகரமான குற்ற த்ரில்லர் வகை படமாகிய இந்தப் படம் மும்பையில் தாராவி பகுதியில் நாட்டுத் துப்பாக்கி கலாச்சாரத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது.
இந்தப் படத்தை இயக்குநர் விவேக் அவர்கள் எழுதி இயக்குகிறார். கதை எழுதும்போதே இந்தக் கதைக்கு பிரியாமணி பொருந்துவார் என முடிவெடுத்துவிட்டதாக கூறி இருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் லூக்கை மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.