தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சந்தானம் முதன்முறையாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க ஆரம்பிக்கப்பட்ட படம் “மன்னவன் வந்தானடி” பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.
காதல் படமாக தயாரான இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் அமெரிக்காவில் நடந்தது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பாதியிலேயே எதிர்பாராத விதமாக கிடப்பில் போடப்பட்டது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பின் அந்த படத்தை மீண்டும் தூசு தட்டபட உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான சந்தானத்தின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெறுவதால் அந்த படத்தில் முதலீடு செய்ய முன்னணி தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளருமான வருண் மணியன் முன் வந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.