நடிகர் பவன் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் கட்டும் போது ஷாக் அடித்து 4 ரசிகர்கள் பலியாகியுள்ளனர்.பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
இவரது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடும் வகையில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் அருகே இருக்கும் இவரது தீவிர ரசிகர்கள் நேற்று இரவு நேரத்தில் பெரிய பேனர் கட்டிக்கொண்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பேனரில் உள்ள இரும்பு பிரேம் வழியாக பாய்ந்தது. இதனால் 7 பேர் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். உடன் இருந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சித்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்கள் தங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.