தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சினேகா. இவர் தனது 8ம் ஆண்டு திருமண நாளை நடிகர் பிரசன்னவுடன் கடந்த மாதம் கொண்டாடினர்.
2001 ம் ஆண்டு வெளியான “என்னவளே” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சினேகா. பின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், தளபதி விஜய், பிரஷாந்த், சூர்யா வுடன் நடித்தார். இவர் நடிப்பில் வெளிவந்த வசீகரா, வசூல் ராஜா, ஆட்டோ கிராப் , பார்த்தாலே பரவசம், ஏப்ரல் மாதத்தில் , உன்னை நினைத்து , ஹரிதாஸ் என அனைத்தும் பெரிய ஹிட் அடித்தன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற அழகான ஆண்குழந்தை பிறந்தது.
சில வருடங்கள் பின் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். வேலைக்காரன், பட்டாஸ் என பல படங்களில் நடித்தார். சினேகாவிற்கு கடந்த ஜனவரி 24 ஆம் தேதி ஆத்யந்தா என்ற பெண் குழந்தை பிறந்தார்.
இந்நிலையில் இதுவரை தனது மகளின் புகைப்படத்தை வெளியிடாத சினேகா, இப்போது தனது கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்முறையாக தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை நேற்று வெளியிட்டுள்ளார்.