V4UMEDIA
HomeNewsKollywoodகார்த்தியின் 'சுல்தான்' படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர்

கார்த்தியின் ‘சுல்தான்’ படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர்

இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி – ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சுல்தான்’. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். விவேக் -மெர்வின் இசையமைக்கிறார். சுல்தான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Karthi to Romance Rashmika

தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், “சுல்தான் 90% படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் வேலைகள் முடிந்துவிட்டன. கொரோனா சூழலுக்கு அப்பால் படத்தின் மீதி வேலைகளை முடிப்பதற்கான சாத்திய கூறுகளையும் எதிர்பார்த்து வருகிறோம். இது மிகப்பெரிய பட்ஜெட் படம் மற்றும் முழுமையான என்டேர்டெயினர். படம் ரிலீஸ் குறித்து இதுவரை எந்த திட்டமும் இல்லை!” என தெரிவித்துள்ளார்.

#Sulthan 90% shoot & Major edit are over. Looking at the possibilities to finish the balance works beside #COVID19 .This will be one of the biggest production & a complete entertainer from @DreamWarriorpic As you all know.. no plans on the release yet! @Bakkiyaraj_k #JaiSulthan— S.R.Prabhu (@prabhu_sr) August 25, 2020

Most Popular

Recent Comments