நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் இணைந்து ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் அரசியல்வாதி தோற்றத்தில் இவர்களின் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது .
கொரோனா ஊரடங்கு காரணமாக பொது நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டு , சில கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகளை நடித்த அனுமதி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ராம் எழுதிய ‘சென்னை டூ மெட்ராஸ்’ என்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் விஜய் சேது வெள்ளை நிற தாடியுடன் மாஸ்க் அணிந்த படி கலந்து கொண்டார். இந்த புது கெட்டப்பிற்கு என்ன காரணம் என்று கேட்ட போது, தான் 27 வயதிலிருந்து முடிக்கு கலர் செய்வதாகவும், இந்த ஊரடங்கு காலத்தில் அது தேவைப்படாததால் அதற்குச் சிறிது காலம் ஓய்வு விடுத்ததாகக் நகைச்சுவையாகக் கூறினார். பிறகு சென்னையின் பெருமைகள் பற்றியும், அந்த புத்தகத்தை எழுதிய ராம் பற்றியும் புகழ்ந்து பேசினார்.
VJS ஏன் இந்த New Getup?- Anchor-ன் கேள்விக்கு செம Comedy-ஆக பதில் சொன்ன … https://t.co/lHvGRbL7gK via @YouTube
— Radhakrishnan Parthiban (@rparthiepan) August 21, 2020