ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார் என அழைக்கப்படும் ஏ.வி.மெய்யப்பன் நினைவு நாள் ஆகஸ்ட் 12ஆம் தேதி (1979). இந்தியத் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், சமூகத் தொண்டாற்றியவருமான ஏ.வி.மெய்யப்பன், வடபழனியில் உள்ள ஏவிஎம் ப்ரொடக்சன்ஸ் என்ற புகழ்பெற்ற நிறுவனத்தை நிறுவியர் ஆவார். ஏ.வி.மெய்யப்பன் தனது வாழ்நாளில் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார்.
தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். தென்னிந்தியத் திரைத்துறையின் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற 2 பேர் எஸ்.எஸ்.வாசன், எல்.வி.பிரசாத்).
தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளாக மூன்று தலைமுறையினரால் வெற்றிகரமாக இயங்கிய ஒரே நிறுவனம் ஏ.வி.எம் என்பது குறிப்பிடத்தக்கது.