சினிமா படப்பிடிப்புகள் இல்லாத நிலையில், பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். சில தினங்களுக்கு முன் தனது மாமனார் நாகார்ஜுனாவுடன் இணைந்து செடிகளை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் வீடியோ ஒன்றை நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். செடிகளை பராமரிக்கும் சேலஞ்சை ராஜ்யசபா எம்பி சந்தோஷ்குமார் அவர்கள் தான் சமந்தாவுக்கு கொடுத்தார்.
அந்த சேலஞ்சை நிறைவேற்றிய சமந்தா, தனது பங்குக்கு கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா, ஷில்பா ரெட்டி மற்றும் ரசிகர்களுக்கு மூன்று செடிகள் நட்டு, அதனை பராமரிக்க வேண்டும் என சமந்தா கேட்டுக்கொண்டார்.
This is for you @urstrulyMahesh garu. Here’s to a Greener India and Good health. Thank you #StaySafe pic.twitter.com/1mRYknFDwA— Vijay (@actorvijay) August 11, 2020
பல பிரபலங்களும் “கிரீன் இந்தியா” சேலஞ்சில் மரக்கன்றுகளை நட்டு அந்தப் புகைப்படங்களைத் தங்களின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு, இரண்டு தினங்களுக்கு முன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இந்த சேலஞ்சில் மரக்கன்றுகளை நட்டு அந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த சவாலை ஜூனியர் என். டி. ஆர், தளபதி விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரையும் செய்யுமாறு தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தளபதி விஜய் இந்த சவாலை ஏற்பாறா இல்லையா என கேள்வி எழுந்த நிலையில் அவர் அந்த சவாலை ஏற்று கொண்டுள்ளார்.
Thanks a lot brother for taking this up👍 Stay safe! 🤗🤗— Mahesh Babu (@urstrulyMahesh) August 11, 2020
தளபதி விஜய் இன்று அவரது வீட்டு தோட்டத்தில் செடி நட்டு அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் ” மகேஷ் பாபு இது உங்களுக்காக. பசுமையான இந்தியா உருவாக்குவோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் ” என ட்வீட் செய்துள்ளார். தளபதி விஜய் ட்வீட் செய்த சில நிமிடங்களில் உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. தளபதி விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு அவர்களின் ரசிகர்கள் அனைவரும் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்கின்றனர்.