கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சூப்பர்ஸ்டார் ரஜினி, தளபதி விஜய், தனுஷ், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களையும் த்ரிஷா, மாளவிகா மோகனன் உள்பட நடிகைகளையும் தனது டுவிட்டரில் வாய்க்கு வந்ததை கூறி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் மீரா மிதுன். ஒரு படிக்கு மேலே சென்று தளபதி விஜய் யின் மனைவி, மகன் மற்றும் சூர்யாவின் மனைவியை தேவையின்றி இழிவாக பேசியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அனைத்து ரசிகர்களும் மீராவை ஏக வசனத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர். முன்னணி பத்திரிகைகளே மீராவை சைக்கோ, லூசு என கூறுகின்றனர். இது மட்டுமின்றி ஏற்கனவே பலர் பணத்தை திருடி ஏமாற்றி ஜெயில் போய் வந்துள்ளாள்.
கடந்த சில நாட்களாகவே நடிகை மீராமிதுன் நெகட்டிவ் பப்ளிசிட்டிக்காக தனது டுவிட்டரில் திரை உலக பிரபலங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை செய்து வருகிறார் என்பதும், அவர் நினைத்தது போலவே நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைத்தாலும் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் கோபத்திற்கு பெரிதும் ஆளாகியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று இயக்குனர் இமயம் பாரதிராஜா இது குறித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் மீராமிதுனுக்கு கண்டனமும் தளபதி விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவருக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.. https://t.co/qR32iviTfO— Suriya Sivakumar (@Suriya_offl) August 11, 2020
இந்த அறிவுரையை ஏற்றுக்கொண்ட நடிகர் சூர்யா இதுகுறித்து தனது டுவிட்டரில் பக்கத்தில் இன்று ட்வீட் செய்துள்ளார். அதில் “எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்” என கூறியுள்ளார்.
