தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். இவரது படைப்புகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரது இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7G ரெயின்போ காலனி , யாரடி நீ மோகினி , மயக்கம் என்ன, ஆயரத்தில் ஒருவன் என அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இயக்குனர் செல்வராகவன் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தனக்கு தோன்றும் புதிய சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வருவார்.
இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் இன்று காலை (ஆகஸ்ட் 11) தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் ” கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?
நான், நண்பர்களுடன் மாலை முழுதும் அரட்டை அடித்து, விளையாடி, தூரத்தில் அப்பா நிழல் பார்த்து ,வீட்டிற்கு ஓடி ,அம்மா வைத்ததை சாப்பிட்டு, எந்தக் கவலையும் இல்லாது தூங்கிப் போன பொழுதை கேட்பேன்! 😍 😂😂😂 !! அல்லது …காலை முதல் தெரு ஓரம் காத்திருந்து அவள் என்னைக் கடந்து போகையில் உரசும் விழிகளின் தாக்கம் கேட்பேன் !😁😁😁 ” என கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?
நான், நண்பர்களுடன் மாலை முழுதும் அரட்டை அடித்து, விளையாடி, தூரத்தில் அப்பா நிழல் பார்த்து ,வீட்டிற்கு ஓடி ,அம்மா வைத்ததை சாப்பிட்டு, எந்தக் கவலையும் இல்லாது தூங்கிப் போன பொழுதை கேட்பேன்! 😍 😂😂😂— selvaraghavan (@selvaraghavan) August 11, 2020
இந்த ட்வீட் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. “கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? ” என்று இயக்குனர் செல்வராகவனின் கேள்விக்கு ரசிகர்கள் சுவாரஸ்யமான பதில் அளித்து வருகின்றனர்.