சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு – வைரமுத்து வாழ்த்து கவிதை
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கவிதையில் நகலெடுக்க முடியாத உடல்மொழி, சூரியச் சுறுசுறுப்பு, கிழவி குழவியென வசப்படுத்தும் வசீகரம். 45 ஆண்டுகளாய் மக்கள் வைத்த உயரத்தை தக்க வைத்த தந்திரம், இரண்டு மணி நேரத்தனிமைப் பேச்சிலும் அரசியலுக்குப் பிடிகொடுக்காத பிடிவாதம், இவையெல்லாம் ரஜினி, வியப்பின் கலைக்குறியீடு என வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.
நகலெடுக்க முடியாத
உடல்மொழி
சூரியச் சுறுசுறுப்பு
கிழவி குழவியென
வசப்படுத்தும் வசீகரம்
45 ஆண்டுகளாய்
மக்கள் வைத்த உயரத்தைத்
தக்கவைத்த தந்திரம்
இரண்டுமணி நேரத்
தனிமைப் பேச்சிலும்
அரசியலுக்குப்
பிடிகொடுக்காத பிடிவாதம்
இவையெல்லாம் ரஜினி;
வியப்பின் கலைக்குறியீடு!@rajinikanth