சினிமா படப்பிடிப்புகள் இல்லாத நிலையில், பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். சில தினங்களுக்கு முன் தனது மாமனார் நாகார்ஜுனாவுடன் இணைந்து செடிகளை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் வீடியோ ஒன்றை நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். செடிகளை பராமரிக்கும் சேலஞ்சை ராஜ்யசபா எம்பி சந்தோஷ்குமார் அவர்கள் தான் சமந்தாவுக்கு கொடுத்தார்.
அந்த சேலஞ்சை நிறைவேற்றிய சமந்தா, தனது பங்குக்கு கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா, ஷில்பா ரெட்டி மற்றும் ரசிகர்களுக்கு மூன்று செடிகள் நட்டு, அதனை பராமரிக்க வேண்டும் என சமந்தா கேட்டுக்கொண்டார்.
பல பிரபலங்களும் “கிரீன் இந்தியா” சேலஞ்சில் மரக்கன்றுகளை நட்டு அந்தப் புகைப்படங்களைத் தங்களின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு, இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு இந்த சேலஞ்சில் மரக்கன்றுகளை நட்டு அந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த சவாலை ஜூனியர் என். டி. ஆர், தளபதி விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரையும் செய்யுமாறு தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தளபதி விஜய் இந்த சவாலை ஏற்பாறா இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
மகேஷ் பாபு இன்று 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பல பிரபலங்களும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் பிறந்த நாள் ஸ்பெஷலாக இன்று காலை ‘சர்காரு வாரி பட்டா’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
