கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த கொடிய வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனா ஊரடங்கினால் வருவாய் இழந்து அவதிப்படும் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு தங்களால் முயன்ற உதவியை சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர்.
வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் வீட்டை ஒட்டி இருக்கும் சிறிய பெட்டி கடையை நம்பி தான் அவர்கள் வாழ்வாதாரம் உள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கினால் வருவாய் இழந்து அவதிப்படுக்கின்றனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். ஜெயராஜ் (32), ஆனந்தராஜ் (31), வெங்கடேஷ் (29) இந்த மூன்று பேரும் மனவளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளனர். போலியோ தாக்கியதால் நடமாட முடியாமல் தவிக்கின்றனர். போக்குவரத்து பிரச்சனையால் கடைக்கு எந்த பொருளும் வருவது இல்லை. தமிழக அரசு வழங்கும் உதவி தொகை மூன்று பேருக்கும் போதுமானதாக இல்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மூன்று மாற்றுத் திறனாளிகள் உள்ள இந்த குடும்பத்தின் வாழ்வாதத்திற்கு உதவும் வகையில் ரூ 1,00,000 நிதி உதவியை தூத்துக்குடி மாவட்ட ரஜினி மன்ற செயலாளர் ஸ்டாலின் மற்றும் நாகை மாவட்ட செயலாளர் வழங்கினார்கள்.
வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மூன்று மாற்றுத் திறனாளிகள் உள்ள குடும்பத்தின் வாழ்வாதத்திற்கு உதவும் வகையில் ரூ 1,00,000 நிதி உதவி வழங்கப்பட்டது.@rajinikanth @rmmoffice @RajiniFollowers @RangarajPandeyR @MaridhasAnswers pic.twitter.com/jA3zkJJ68I— AJ.Stalin (@ajstalin17) April 29, 2020