V4UMEDIA
HomeNewsKollywoodஜெயில் படத்தின் அடுத்த பாடல் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் !

ஜெயில் படத்தின் அடுத்த பாடல் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் !

வசந்த பாலன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், ஸ்ரீதரன் மரியதாஸன் தயரித்துள்ள திரைப்படம் ‘ஜெயில்’. ராதிகா சரத் குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ரோபோ சங்கர், பிரேம்ஜி அமரன், பிரகாஷ் ராஜ், சூரி, ஆனந்த் பாபு, பாபி சிம்ஹா, அபர்நதி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

GV Prakash Kumar-Dhanush combo is back after eight years

ஜெயில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு உரிமையை பிரபல முன்னணி நிறுவனமான ‘சோனி செளத் மியூசிக்’ வாங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்தார். அதில்
” பத்து காசு இல்லன்னாலும் பணக்காரண்டா …. என் சொத்து சுகம் எல்லாமே என் நண்பன் தானடா !!! ” என இரண்டாவது பாடல் பற்றி ட்வீட் செய்துள்ளார். இப்பாடலை பிரபல பாடலாசிரியர் அறிவு எழுதியுள்ளார். 

பத்து காசு இல்லன்னாலும் பணக்காரண்டா …. என் சொத்து சுகம் எல்லாமே என் நண்பன் தானடா !!! ..

thanks for the 💫🔥 lyrics @TherukuralArivu . 2ndsingle from #jail soon after dsuper hit #kaathodukaathaanen..#friendship anthem for all #pullingos ✨💫🙌@Vasantabalan1 @SonyMusicSouth— G.V.Prakash Kumar (@gvprakash) August 2, 2020



முதல் பாடலான ‘காத்தோடு காத்தானேன்’ பாடலை பிரபல பாடலாசியர் கபிலன் வரிகளில், தனுஷ் மற்றும் அதிதி ராவ் பாடியுள்ளனர். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் இரண்டாவது பாடலுக்கு இப்போதே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கொண்டிருகின்றனர்.

Most Popular

Recent Comments