தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இயக்குனர் அமீர் இயக்கத்தில் “பருத்தி வீரன்” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ஆயிரத்தில் ஒருவன் ,பையா, சிறுத்தை ,நான் மகான் அல்ல, கொம்பன், மெட்ராஸ், கடைக்குட்டி சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி என பல வெற்றி படங்களை தந்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்து ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த படம் “கைதி”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இது மட்டுமின்றி நடிகர் கார்த்தியின் முதல் 100 கோடி வசூல் செய்த படமும் இது தான். கைதி படத்திற்கான இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் கைதி படம் சர்வதேச கௌரவத்தையும் அடைந்துள்ளது. ஆகஸ்ட் 9-15 தேதிகளில் நடைபெற உள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கைதி படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Glad to share this 🙂 Big thanx to the entire team👍https://t.co/WpwWYl2OAK pic.twitter.com/zyBJkQScsv— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 1, 2020
இந்த மகிழ்ச்சியான செய்தியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் “இதை உங்களுடன் பகிர்வதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். படத்தின் முழு டீம்கும் மிகப்பெரிய நன்றி” என பதிவிட்டுள்ளார்.