பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சன் கடைசியாக ஷூஜித் சிர்காரின் நகைச்சுவை-படமான குலாபோ சித்தாபோவில் ஆயுஷ்மான் குர்ரானாவுடன் நடித்தார். இந்த படம் ஆரம்பத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படவிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இது அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்பட்டது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் பெற்றது.
இந்த நிலையில் அமிதாப் பச்சன் மருத்தவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் என அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் ட்வீட் செய்துள்ளார். அதில் ” தனக்காக பிரார்த்தனை செய்த குடும்பத்தினருக்கும் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார். இருப்பினும் அபிஷேக் பச்சன் இன்னும் கொரோனாவில் இருந்து குணமாகவில்லை என்றும் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
T 3613 – I have tested CoVid- have been discharged. I am back home in solitary quarantine.
Grace of the Almighty, blessings of Ma Babuji, prayers & duas of near & dear & friends fans EF .. and the excellent care and nursing at Nanavati made it possible for me to see this day . pic.twitter.com/76jWbN5hvM— Amitabh Bachchan (@SrBachchan) August 2, 2020