தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். பாகுபலி படத்தின் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவையும் தன் நடிப்பால் ஈர்த்தார்.
One more pic from the vallaikaapu function….picture courtesy my mom….right behind meee….🧡🧡🧡 pic.twitter.com/Ie8W1NxDWo— Ramya Krishnan (@meramyakrishnan) July 22, 2020
பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பாகுபலி 2, தானா சேர்ந்த கூட்டம், சூப்பர் டீலக்ஸ் என வித்யாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்ப்போது ரம்யா கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ப்பமாக இருந்த போது நடைபெற்ற வளைகாப்பு செய்த புகைப்படத்தை பகிர்ந்து “இப்போது உயிருடன் இல்லாத எனது இரண்டு பெரியம்மா எனக்கு வளைகாப்பு சடங்கு செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்” என கூறி பழைய நினைவுளை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.