தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடித்த “சூரரைப்போற்று” திரைப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் ரிலீசாகும். இப்படத்தை தொடர்ந்து வாடிவாசல், அருவா என பல படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
நடிகர் சூர்யா OTT யில் வெளியாகவுள்ள புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் வரும் சம்பளத்தை நடிகர் சூர்யா ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதியாக அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த வெப் சீரிஸில் 9 எபிசோடுகள் இருப்பதாகவும், ஒவ்வொரு எபிசோடும் ஒன்பது இயக்குநர்கள் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்தார்த் இயக்க வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.