திருநெல்வேலி மாவட்ட துணை காவல் ஆய்வாளர் அர்ஜுன் சரவணன் அவர்கள் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். இவர் இளையராஜா மற்றும் வடிவேலு பற்றி செய்த ட்வீட் மிக வைரலாகி வருகிறது.
என்ன தான் வடிவேலு சில வருடங்களாக நடிக்காமல் இருந்தாலும் நம்மை விட்டு அவரை எளிதில் பிரிக்க முடியாது. நமது அன்றாட வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை வடிவேலுவின் பாடி லாங்குவேஜ் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளோடு ஒப்பிட்டு பேசுவோம். அந்த அளவுக்கு வடிவேலு நம்முடன் ஒன்றி விட்டார் என்றே சொல்லலாம்.
போலீஸ் அதிகாரி கஞ்சியை சட்டைக்கு போட்டு விரைப்பாக வேலை பாக்கனும். ஆனா ஆளே எப்பவும் விரைப்பாக இருக்கனும்னு எதிர்பார்த்தா எப்படிங்க?
கடினமான சூழ்நிலைகளை எளிதில் கடக்க உதவுவதே நல்ல இசையும் நகைச்சுவையுமே! இளைராஜாவும் வடிவேலுமே மாமருந்து. #vadiveluforlife #Ilayarajaforsoul https://t.co/ml1OIYXMhG pic.twitter.com/y9LyWXvj8B— Arjun Saravanan (@ArjunSaravanan5) July 13, 2020
இந்நிலையில் வைகைப்புயல் வடிவேலுவை அழகு சாதன பொருட்களின் விளம்பரங்களோடு ஒப்பிடும் ஒரு வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார் ரசிகர் ஒருவர். அதை ஷேர் செய்தார் திருநெல்வேலி மாவட்ட துணை காவல் ஆய்வாளர் அர்ஜுன் சரவணன் அவர்கள். அப்போது அவரது பதிவில் கமெண்ட் செய்த ஒருவர் ‘ஒரு போலீஸ் அதிகாரி இதுமாதிரி போஸ்ட் போடுவாறுன்னு நினைக்கல’ என கூற அவருக்குப் பதிலளித்த அர்ஜுன் ‘போலீஸ் அதிகாரி கஞ்சியை சட்டைக்கு போட்டு விரைப்பாக வேலை பாக்கனும். ஆனா ஆளே எப்பவும் விரைப்பாக இருக்கனும்னு எதிர்பார்த்தா எப்படிங்க? கடினமான சூழ்நிலைகளை எளிதில் கடக்க உதவுவதே நல்ல இசையும் நகைச்சுவையுமே! இளைராஜாவும் வடிவேலுமே மாமருந்து. #vadiveluforlife #Ilayarajaforsoul’ எனப் பதில் தெரிவித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.