தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் முதல் படம் “புஷ்பா” . அல்லு அர்ஜூனின் 20 ஆவது படமான இப்படத்திற்கு “PUSHPA” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், கன்னடம் ,ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து திடீரென விலகினார். இந்நிலையில், கால்ஷீட் பிரச்சனை காரணமாக புஷ்பா படத்தில் இருந்து விலகியதாகவும் வேறு காரணங்கள் ஏதும் இல்லை என நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.